×

முன்னோடி விவசாயிகள் ஆலோசனை வீரதீர செயல் புரிந்தோர் அசோகசக்ரா தொடர் கேலண்டரி விருது பெற விண்ணப்பிக்கலாம்

கரூர்: கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: அசோகசக்ரா தொடர் கேலண்டரி விருது – 2023ம் ஆண்டிற்கு வழங்கப்படவுள்ளதால் கரூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அசோகசக்ரா தொடர் கேலண்டரி விருதுக்கு விண்ணப்பிக்க தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்ட 18 வயதக்கு மேற்பட்டவர்களாகவும், வீர தீர செயல் புரிந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஜூலை 5ம்தேதிக்குள் கரூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியான நபர்கள், தங்களின் கருத்துருக்களை மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு நேரிடையாக விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து, மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், கரூர் என்ற முகவரிக்கு நேரிடையாகவோ அல்லது தபால் மூலமாகவோ கருத்துருவினை சமர்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post முன்னோடி விவசாயிகள் ஆலோசனை வீரதீர செயல் புரிந்தோர் அசோகசக்ரா தொடர் கேலண்டரி விருது பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Pioneer Farmers Advisers ,Karur ,
× RELATED செங்குந்தபுரம் செல்லும் சாலையில்...