×

சென்னை பஸ்சில் ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ.1 கோடி பறிமுதல்

அவிநாசி: திருப்பூர் மாவட்டம் அவிநாசி, திருப்பூர் சாலை பழங்கரை பிரிவு அருகே அவிநாசி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது சென்னையில் இருந்து கோவைக்கு அரசு பஸ் வந்தது. அதிலிருந்து இறங்கிய 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த ஆரீப் (47), பொன்னியம்மன் நகரைச் சேர்ந்த அப்துல்காதர் (25) என்பதும், அவர்கள் வைத்திருந்த கை பைகளில் ₹1 கோடி ரொக்கப்பணம் இருந்ததும் தெரியவந்தது. பணத்துக்கான ஆவணம் எதுவும் அவர்களிடம் இல்லை. இதையடுத்து 1 கோடி ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது. வருமான வரித்துறையினரிடம் அந்த பணம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

The post சென்னை பஸ்சில் ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ.1 கோடி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Avinasi ,Avinasi Prohibition Police Inspector ,Anurada Vehicle ,Tiruppur Road Antique Division ,Tiruppur District ,Dinakaran ,
× RELATED அவிநாசி பகுதியில் பிரபல ஜவுளிக்கடையில் தீ விபத்து