×

அரிக்கொம்பன் யானை ஆரோக்கியமாக உள்ளது வனத்துறை தகவல்

சென்னை: அரிக்கொம்பன் யானை ஆரோக்கியமாகவும், நல்ல நிலையிலும் உள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வனத்துறை வெளியிட்ட அறிக்கை: ஜூன் 5ம் தேதி பிடிபட்ட அரிக்கொம்பன் என்ற காட்டு யானை கடந்த வாரங்களில் பெரும் மாற்றத்தை அடைந்துள்ளது. கடந்த காலங்களில் தனது உணவிற்காக அரிசி மற்றும் பயிர்களை சாப்பிட்டு வந்த யானை, காட்டுப் பகுதியில் விடப்பட்டதால், 20 நாட்களாக நல்ல ஊட்டச்சத்துக்கள் உள்ள இயற்கையான உணவுகளை எடுத்துக் கொண்டும், சுதந்திரமாக உலாவியும் வருகிறது. முன்களப் பணியாளர்கள், யானை நல்ல ஆரோக்கியமாகவும், நல்ல நிலையிலும் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

The post அரிக்கொம்பன் யானை ஆரோக்கியமாக உள்ளது வனத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Arikomban ,CHENNAI ,Arikkomban ,Forest Department ,Dinakaran ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...