×

குடிபோதையில் இறந்தவர் உடலை கடித்து குதறிய நாய்கள்

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே குடிபோதையில் இறந்து கிடந்த கொத்தனார் உடலை தெரு நாய்கள் கடித்து குதறின. திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி பாறைக்குளத்தைச் சேர்ந்தவர் மதிவாணன் (65). கொத்தனாரான இவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். குழந்தைகள் இல்லாத இவர் இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார்.

இந்நிலையில் நேற்று அதிக மது போதையில் பாறைக்குளம் பகுதியில் வந்தபோது மயங்கி விழுந்து இறந்தார். அப்போது அவரது உடலை தெருநாய்கள் கடித்து குதறியதால் உடல் சிதைந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post குடிபோதையில் இறந்தவர் உடலை கடித்து குதறிய நாய்கள் appeared first on Dinakaran.

Tags : Dintugul ,Kothanar ,Dindukkal Setinayakkanpatti ,
× RELATED கோயில் வரவு, செலவு கணக்கு கேட்டதால்...