×

லைக்சுக்காக கிணற்றில் குதித்து வாலிபர் உயிரை விட்ட பரிதாபம்

சேத்துப்பட்டு : திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கரிப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவர் சென்னையில் கட்டிட மேஸ்திரியாக உள்ளார். இவரது மகன்கள் சச்சின்(21) சரண்(19). தனியார் மருந்து கம்பெனியில் வேலை செய்யும் சரணும் அவரது நண்பர் ரமேசும் நேற்று கரிப்பூருக்கு பஸ்சில் சென்றனர். அங்குள்ள விவசாய நிலத்தில் உள்ள கிணற்றை பார்த்ததும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் போட்டால் லைக்ஸ் கிடைக்கும் என்று சரண் கூறியுள்ளார்.

அதன்படி அவர் கிணற்றுக்குள் மேலிருந்து டைவ் அடித்துள்ளார். அதை அவரது நண்பர் வீடியோ எடுத்துள்ளார். நீச்சல் தெரியாததால் மூச்சு திணறி நீருக்குள் மூழ்கினார் சரண். இதை பார்த்து ரமேஷ் அலறவே அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்து சேத்துப்பட்டு தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து 6 மணி நேரம் போராடி சரண் சடலத்தை மீட்டனர். லைக்சுக்காக கிணற்றில் டைவ் அடித்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post லைக்சுக்காக கிணற்றில் குதித்து வாலிபர் உயிரை விட்ட பரிதாபம் appeared first on Dinakaran.

Tags : Sethupattu ,Yehumalai ,Garipur village ,Tiruvannamalai district ,Chennai ,
× RELATED சேத்துப்பட்டு அருகே செய்யாற்றுப்படுகையில் மணல் கடத்தல்