×

பிரதமர் அலுவலக அதிகாரியாக நடித்து மோசடி செய்தவர் கைது

வதோதரா : பிரதமர் அலுவலகத்தில் இயக்குநராக இருப்பதாக கூறி மோசடி செய்த குஜராத் மாநிலம் வதோதரா நகரை சேர்ந்த மயாங் திவாரி என்பவரை போலீசார் வெள்ளியன்று கைது செய்தனர். இவர் பிரதமர் அலுவலக அதிகாரி என்ற போலி அடையாள அட்டையுடன் வதோதராவில் இருக்கும் தனியார் பள்ளியை கடந்த ஆண்டு சேர்க்கையின்போது அணுகியுள்ளார். இங்கு தனது குடும்ப நண்பரின் இரண்டு குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்று கோரியுள்ளார். பள்ளி இயக்குநரின் தனிப்பட்ட விசாரணையில் மயாங் திவாரி மோசடி செய்திருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் திவாரியை வாக்ஹோடியா போலீசார் கைது செய்தனர்.

The post பிரதமர் அலுவலக அதிகாரியாக நடித்து மோசடி செய்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Prime Minister's Office ,Vadodara ,Vadodara, Gujarat ,
× RELATED குஜராத்தில் கார் மீது லாரி மோதி 10 பேர் பலி