×

டிஎன்பிஎல் கிரிக்கெட்; நெல்லை அணி அபார வெற்றி

சேலம் : டிஎன்பிஎல். கிரிக்கெட்டில் நேற்று சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடந்த 14வது லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பேட்டிங் செய்தது. அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்த நிலையில் பாபா அபரஜித் மட்டும் 51 பந்தில் 79 ரன் (5சிக்ஸர் 4 பவுண்டரி) குவித்தார். இறுதியில் சேப்பாக் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன் எடுத்தது. நெல்லை அணி தரப்பில் பொய்யாமொழி 3 விக்கெட் வீழ்த்தினார்.

அடுத்து களமிறங்கிய நெல்லை ராயல் கிங்ஸ் அணி இலக்கை நோக்கி அதிரடியாக ஆடியது. தொடக்க வீரர் அருண் கார்த்திக் அபாரமாக ஆடி சதம் விளாசினார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அருண்கார்த்திக் நெல்லை அணியை 18.5 ஓவரில் 160 ரன் எடுத்து வெற்றி பெற வைத்தார். ஆட்டநாயகன் விருதை அருண் கார்த்திக் 104 ரன் (5 சிக்ஸர் 10 பவுண்டரி) பெற்றார். சேப்பாக் தரப்பில் ரோஹித் 2 விக்கெட் வீழ்த்தினார்.

The post டிஎன்பிஎல் கிரிக்கெட்; நெல்லை அணி அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : TNPL Cricket ,Nellie ,Salem ,DNPL ,Salem Cricket Foundation Stadium ,Chepak ,TNBL Cricket ,Rice ,Dinakaran ,
× RELATED நெல்லை மாநகராட்சியில் தூய்மைப்...