×

டிஜிபி பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ள சைலேந்திரபாபு டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்..!!

சென்னை: டிஜிபி பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ள சைலேந்திரபாபு டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிஜிபி சைலேந்திரபாபு வரும் 30ம் தேதியுடன் பணியிலிருந்து ஓய்வு பெற உள்ளார். தமிழக அரசு பணிகளுக்கான பணியாளர்களை டிஎன்பிஎஸ்சி தேர்வு செய்து வருகிறது. ஏற்கனவே டிஜிபி பதவி வகித்த நட்ராஜும் ஓய்வுக்கு பிறகு டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவியில் இருந்துள்ளார். குமரி மாவட்டத்தை சேர்ந்த சைலேந்திரபாபு 2 ஆண்டுகளாக தமிழக காவல்துறை தலைவராக உள்ளார்.

The post டிஜிபி பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ள சைலேந்திரபாபு டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்..!! appeared first on Dinakaran.

Tags : Silendra Babu ,President ,DNBSC ,DGB ,Chennai ,Sylendrababu ,Sylendra Babu ,Dinakaran ,
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்