சென்னை: மாநிலத்தில் செல்வாக்கு உள்ள கட்சித் தலைமையில்தான் கூட்டணி என முதல்வர் கூறிய கருத்துக்கு செல்லூர் ராஜு வரவேற்பு தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதை வரவேற்கிறேன்; அவர் உண்மையைத்தான் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளித்துள்ளார். கூட்டணி குறித்து அண்ணாமலை முடிவெடுக்க முடியாது; அவரது கட்சித் தலைமைதான் முடிவெடுக்கும். பாஜக தலைமையில் கூட்டணி என அண்ணாமலை கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு செல்லூர் ராஜு பதில் அளித்தார்.
The post மாநிலத்தில் செல்வாக்கு உள்ள கட்சித் தலைமையில்தான் கூட்டணி என முதல்வர் கூறிய கருத்துக்கு செல்லூர் ராஜு வரவேற்பு..!! appeared first on Dinakaran.