×

கல்லூரி பேராசிாியையிடம் நகை பறித்த மர்ம நபர்கள்

திருச்சி: திருச்சியில் கல்லூரி பேராசிரியையிடம் நகை பறித்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவத்தினர் காலனியைச் சேர்ந்தவர் சேவியர் பெனடிக். இவரது மனைவி பேபி நிர்மலா (50). இவர் சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள பெண்கள் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து ஜி கார்னர் பகுதி வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மூன்று பேர், திடீரென பேபி நிர்மலா கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச் செயினை பறித்து கொண்டு தப்பினர். இதுகுறித்து பொன்மலை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கல்லூரி பேராசிாியையிடம் நகை பறித்த மர்ம நபர்கள் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Trichy Ponmalai ,Dinakaran ,
× RELATED பொன்மலை ரயில்வே பணிமனையில் வேலைநேரம்...