×

கல்பனா சாவ்லா விருது பெற 30ம்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூர்: 2023ம் ஆண்டு வீரதீர செயல் புரிந்த பெண் ஒருவருக்கு கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு விடுத்து உள்ளார். இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: 2023ம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது வீர தீர செயல்புரிந்த பெண் ஒருவருக்கு வழங்கப்படவுள்ளது. சமூகத்தில் தானாக முன்வந்து தைரியமாகவும், துணிச்சலுடனும், நல்ல பல செயல்களை செய்திருக்க வேண்டும். மேற்படி நற்செயல்கள் செய்ததற்கான சான்று மற்றும் புகைப்படங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இவ்விருது சுதந்திர தினத்தன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வரால் வழங்கப்படவுள்ளது. இவ்விருது தொடர்பாக இணையதள முகவரியான < https://awards.tn.gov.in/ > ல் 30.06.2023ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அல்லது ஆப்லைனில் இருந்தால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், ராஜா முத்தையா சாலை, பெரியமேடு, சென்னை-600 003 என்ற முகவரிக்கு தபால் மூலமாக வரும் 28.06.2022-க்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04362-235633 என்ற தொலைபேசி எண்ணிலும், 7401703496 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மேற்படி விருது பெறுவதற்கு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வீர, தீர செயல்புரிந்த பெண்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் கூறி உள்ளார். தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தகவல்

The post கல்பனா சாவ்லா விருது பெற 30ம்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...