×

குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள் உள்பட 22 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம் மாநகர போலீஸ் கமிஷனர் நடவடிக்கை

சேலம்: சேலம் டவுன் மகளிர் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் டவுன் குற்றப்பிரிவுக்கும், அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சந்திரகலா செவ்வாய்பேட்டைக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த சின்னதங்கம் அன்னதானப் பட்டிக்கும் மாற்றப்பட்டனர். அம்மாப்பேட்டை சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் கணேசன் அன்னதானப்பட்டி குற்றப்பிரிவுக்கும், அங்கிருந்த இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் கிச்சிப்பாளையம் குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் புஷ்பராணி, கொண்டலாம்பட்டி குற்றப்பிரிவுக்கும், பள்ளப்பட்டி இன்ஸ்பெக்டர் ராணி டவுன் மகளிர் போலீஸ் ஸ்டேசனுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். சூரமங்கலம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சிவக்குமார் அம்மாப்பேட்டை சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும், மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வி அஸ்தம்பட்டி குற்றப்பிரிவுக்கும், அம்மாப்பேட்டை மகளிர் இன்ஸ்பெக்டர் சிவகாமி கன்னங்குறிச்சி குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். வீராணம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகன், வீராணம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும், வீராணம் இன்ஸ்பெக்டர் கஸ்தூரி, அம்மாப்பேட்டை மகளிர் இன்ஸ்பெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளப்பட்டி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நெப்போலியன், பள்ளப்பட்டி சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் பள்ளப்பட்டி குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்னர்.

கன்னங்குறிச்சி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிவக்குமார் சூரமங்கலம் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும், இரும்பாலை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாரதா, இரும்பாலை சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். கொண்டலாம் பட்டி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, இரும்பாலை குற்றப்பிரிவுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த மனோன்மணி கருப்பூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும், அஸ்தம்பட்டி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சசிகலா சூரமங்கலம் மகளிர் இன்ஸ்பெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இரும்பாலை இன்ஸ்பெக்டர் ஜெய்சல்குமார் சேலம் மத்திய குற்றப்பிரிவுக்கும், கருப்பூர் இன்ஸ்பெக்டர் தமிழரசி, நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவுக்கும், டவுன் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சம்பங்கி, மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டராக வும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி பிறப்பித்துள்ளார். இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘‘2ஆண்டுகள் ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றியவர்களும், பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும் இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் மீதும் ஏதாவது புகார்கள் வரும்பட்சத்தில் வேறு மாவட்டத்திற்கு மாறுதல் செய்யப்படுவார்கள்,’’ என்றனர்.

The post குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள் உள்பட 22 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம் மாநகர போலீஸ் கமிஷனர் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Municipal Police Commissioner ,Salem ,Town ,Palaniammal Town Crime Branch ,Annadanapatti ,Inspector ,Chandrakala Sewwaipet ,Dinakaran ,
× RELATED வாகன ஸ்டிக்கர் விவகாரம்: பார்...