×

எலி பேஸ்ட் தின்ற எலக்ட்ரீஷியன் சாவு

 

ஈரோடு,ஜூன்24: ஈரோடு, வீரப்பன் சத்திரம், சுந்தர் வீதியைச் சேர்ந்தவர் பரமசிவம் (21).எலக்ட்ரீஷியன். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 13ம் தேதி சிவகிரி அருகே உள்ள சுள்ளிக்காடு எனும் பகுதிக்கு சென்ற பரமசிவம் வயிற்று வலி காரணமாக எலி பேஸ்ட் தின்றுவிட்டதாக தனது தந்தை அம்சவேலுக்கு போன் மூலமாக தகவல் தெரிவித்துள்ளார்.

தந்தை அம்சவேல் அங்கு சென்று மகனை மீட்டு, அருகில் உள்ள அறச்சலூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார். அங்கு முதலுதவி பெற்ற பின்னர் உயர் சிகிச்சைக்காக பரமசிவத்தை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பரமசிவம் சிகிச்சை பலனின்றி கடந்த 22ம் தேதி இரவு உயிரிழந்தார்.இதுகுறித்து நேற்று முன் தினம் தந்தை அம்சவேல் அளித்த புகாரின் பேரில், சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post எலி பேஸ்ட் தின்ற எலக்ட்ரீஷியன் சாவு appeared first on Dinakaran.

Tags : Erode ,Paramasivam ,Sundar Road ,Veerappan Chatram ,
× RELATED மாநகராட்சி பணியாளர்களுக்கு நீர் ஆகாரங்கள் வழங்கல்