×

மின்னல் தாக்கி பசு மாடு பலி

 

வெள்ளக்கோவில், ஜூன் 24: திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்த முத்தூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் பகலில் வானம் அவ்வப்போது மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு இடி, மின்னலுடன் லேசான மழை பரவலாக பெய்தது. மழையின் போது முத்தூர் சேரம்பாளையம் கல்லாங்காட்டு தோட்டம் முருகேசன் (42) என்பவரது தோட்டத்தில் கட்டியிருந்த 2 பசுமாடுகளில் ஒரு மாடு மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்தில் பலியானது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நில வருவாய் ஆய்வாளர் விசாரணை நடத்தினார். மேலும், கால்நடை மருத்துவருக்கு பிரேத பரிசோதனை செய்யவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் பலியான மாட்டின் உரிமையாளருக்கு இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பலியான மாட்டின் மதிப்பு ரூ.60 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

The post மின்னல் தாக்கி பசு மாடு பலி appeared first on Dinakaran.

Tags : Vellakovil ,Tirupur district ,Kangayam ,Muttur ,Dinakaran ,
× RELATED மாணவி கூட்டு பலாத்காரம் அதிமுக நிர்வாகிக்கு குண்டாஸ்