×

திருப்பரங்குன்றம் தோப்பூரில் ஹோமியோபதி கல்லூரி அமையும் இடத்தை அமைச்சர்கள் ஆய்வு

திருப்பரங்குன்றம், ஜூன் 24: மதுரை அருகே திருமங்கலம் பகுதியில் அரசு ஹோமியோபதி மருத்துவ கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதால் மழைக்காலத்தில் எளிதில் மழைநீர் சூழ்ந்து தேங்கி கொள்கிறது. இதனால் மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகின்றனர். இதையடுத்து ஹோமியோபதி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் அமைத்திட திருப்பரங்குன்றம் அருகிலுள்ள தோப்பூர் காசநோய் மருத்துவமனை பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டது.

நேற்று இந்த இடத்தை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வணிக வரி மற்றும் பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் சங்கீதா, எம்எல்ஏக்கள் கோ.தளபதி, வெங்கடேசன், துணை மேயர் நாகராஜ், மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மணிமாறன், மாவட்ட ஊராட்சி மன்ற துணை தலைவர் முத்துராமன், திருமங்கலம் நகர் மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், மாவட்ட கவுன்சிலர் கிருத்திகா தங்கப்பாண்டியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

The post திருப்பரங்குன்றம் தோப்பூரில் ஹோமியோபதி கல்லூரி அமையும் இடத்தை அமைச்சர்கள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Homeopathy College ,Tiruparangunram Thopur ,Tiruparangunram ,Government Homeopathic Medical College Hospital ,Thirumangalam ,Madurai ,Thiruparangunram Thopur ,
× RELATED கிரிவலப் பாதையில் உள்ள செடி, கொடி, மரங்களில் திடீரென தீ!