×

காட்டு யானை தாக்கி வீடு சேதம்

 

பந்தலூர்,ஜூன்24: பந்தலூர் அருகே நெலாக்கோட்டை விலங்கூர் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் கூலித் தொழிலாளி ஒருவரது வீடு சேதமடைந்தது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம் நெலாக்கோட்டை அருகே விலங்கூர் குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு காட்டு யானை புகுந்தது. இந்த யானை அச்சுதன் என்ற கூலித் தொழிலாளியின் வீட்டை உடைத்து சேதப்படுத்தியது.

வீட்டில் இருந்தவர்கள் அச்சத்தில் கூச்சலிட்டு யானையை துரத்தியுள்ளனர். யானை சிறிது நேரம் அப்பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் சென்றது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்களுக்கு எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படவிலை.சம்பவ இடத்திற்கு பிதர்காடு ரேஞ்சர் ரவி மற்றும் வனத்துறையினர் சென்று சேதம் குறித்து ஆய்வு செய்தனர். பாதிக்கப்பட்டவர் உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

The post காட்டு யானை தாக்கி வீடு சேதம் appeared first on Dinakaran.

Tags : Bandalur ,Nelakottai Vilangur ,Dinakaran ,
× RELATED பந்தலூர் பஜாரில் கழிவுநீர் கால்வாய்...