×

கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆய்வு நாகப்பட்டினம் அருகே சாராய வியாபாரிகள் 3 பேருக்கு குண்டாஸ்

கீழ்வேளூர்: நாகப்பட்டினம் அருகே 3 சாராய வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வெண்மணி காலனி தெருவை சேர்ந்தவர் சார்லஸ் (27). ஏரவாஞ்சேரியை சேர்ந்தவர்கள் செல்வம் (30). சூர்யா (27). இவர்கள் 3 பேரும் தொடர்ந்து சாராய விற்பனை செய்து வந்தனர். இவர்கள் மீது கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் சாராய விற்பனை தொடர்பாக வழக்குகள் உள்ளன. இதுதொடர்பாக சார்லஸ், செல்வம்,சூர்யா 3 பேரும் கைது செய்யப்பட்டு நாகை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த 3 பேரும் தொடர்ந்து சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வருவதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஎஸ்பி பாலகிருஷ்ணன், கீழ்வேளூர் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் ஆகியோர் நாகை எஸ்.பி ஹர்ஷ் சிங்கிற்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து எஸ்.பி. 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய நாகை கலெக்டர் ஜானி டாம் வர்கீசுக்கு பரிந் துரை செய்தார். இதன்பேரில் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஜானிடாம் வர்க்கீஸ் உத்தரவிட்டார். இதையடுத்து கீழ்வேளூர் போலீசார் நாகை, மாவட்ட சிறையில் இருந்த 3 பேரையும் நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

The post கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆய்வு நாகப்பட்டினம் அருகே சாராய வியாபாரிகள் 3 பேருக்கு குண்டாஸ் appeared first on Dinakaran.

Tags : Credit Union ,Nagapattinam ,Kilivelur ,Nagapattinam District ,Venmani Colony… ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்