×

4 மூதாட்டிகளிடம் நகை பறித்தவருக்கு 4 ஆண்டு சிறை

 

திருவாடானை, ஜூன் 24 ஆர் எஸ் மங்கலத்தை சேர்ந்தவர் கோட்டையம்மாள்(60). இவர் கடந்த 16.2.2022ம் ஆண்டு ஆர்எஸ் மங்கலத்தில் இருந்து சிலுகவயல் கிராமத்திற்கு உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டுவீடு திரும்பும்போது பைக்கில் வந்த ஒருவர் கோட்டையம்மாளிடம் தெரிந்தவர் போல் பேசி குளிர்வானம் வாங்கி கொடுத்துள்ளார். அதை குடித்தவுடன் அவர் கழுத்தில் அணிந்திருந்த 3.1/2பவுன் தங்க செயினை கழற்றிக்கொண்டு சென்று விட்டார். கோட்டையம்மாள் இது குறித்து ஆர்.எஸ் மங்கலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் தேவகோட்டை அருகே உள்ள புளியால் கிராமத்தைச் சேர்ந்த சூர்யா என்ற சூரியகுமார் (51) என்பவர் நகையை பறித்து சென்றது தெரிய வந்தது.

இதேபோன்று கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே சூரியகுமார் கண்ணுகுடி கிராமத்தில் பகவதி (57) என்பவரது வீட்டிற்கு சென்று பத்திரிகை கொடுக்க வந்துள்ளதாக கூறி கழுத்தில் அணிந்திருக்கும் செயினை போன்று செய்ய வேண்டி உள்ளது எனக்கூறி 2 பவுன் தங்க செயினை வாங்கி உள்ளார். நகையை வாங்கியவுடன் தப்பி ஓடிவிட்டார். மேலும் சனவெளியை சேர்ந்த வள்ளியிடம் 3 பவுன்தங்க செயின், ஆர் எஸ் மங்கலத்தை சேர்ந்த பொன்னம்மாள் என்பவரிடம் 2 பவுன் தங்க செயின் ஆகியவற்றை ஏமாற்றி சூரியகுமார் பறித்து சென்று விட்டார்.

இந்த நான்கு பேர் கொடுத்த தனித்தனி புகார்களின் பேரில் திருவாடானை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் பிரசாந்த் ஒரு வழக்கிற்கு ஓராண்டு சிறை தண்டனை வீதம் 4 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கி உத்தரவிட்டார். மேலும் ஒரு வழக்கிற்கு ரூ.5000 அபராதம் வீதம் 4 வழக்குகளுக்கு ரூ.20,000 அபராதம் விதித்தார்.

The post 4 மூதாட்டிகளிடம் நகை பறித்தவருக்கு 4 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Thiruvadanai ,Kothayammal ,RS Mangalam ,
× RELATED சுட்டெரிக்கும் கோடை வெயிலால் ஐஸ் பார்கள் விற்பனை படுஜோர்