×

இளம்பெண் மாயம்

 

விருதுநகர், ஜூன் 24: விருதுநகர் அருகே மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். விருதுநகர் அருகே சத்திரரெட்டியபட்டியை சேர்ந்த இளம்பெண் கல்லூரி படித்து விட்டு, வீட்டில் இருந்தார். இவருக்கு பெற்றோர் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். ஆனால் அவர் தூத்துக்குடியை சேர்ந்த ஒருவரை விரும்புவதாக தெரிவித்துள்ளார். விசாரித்து சம்மதம் தெரிவிப்பதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென மாயமாகி உள்ளார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ரூரல் போலீசார் இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

The post இளம்பெண் மாயம் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Chhattrarediyapatti ,
× RELATED நிலக்கடலையில் வேர் அழுகல் நோய்...