×

பேசின்பிரிட்ஜ் பகுதியில் ஓடும் ரயிலில் பெண்ணிடம் 10 சவரன் செயின் பறிப்பு: மர்ம நபருக்கு போலீஸ் வலை

தண்டையார்பேட்டை: ஓடும் ரயிலில் பெண் பயணியிடம் 10 சவரன் தாலி செயின் பறித்துக்கொண்டு தப்பிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்தவர் வளர்மதி (43). இவர், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். தினசரி வேலை முடிந்ததும் இவர், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறநகர் மின்சார ரயிலில் வீட்டிற்கு செல்வது வழக்கம். அதன்படி, நேற்று சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருவள்ளூர் செல்லும் மின்சார ரயிலில் ஏறினார்.

பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது, ரயிலில் ஏறிய ஒரு வாலிபர், ரயில் அங்கிருந்து புறப்படும் நேரத்தில், ரயிலில் இருந்த வளர்மதியின் கழுத்தில் கிடந்த 10 சவரன் தாலி செயினை திடீனெ பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் ரயிலில் இருந்து கீழே குதித்து தப்பி சென்றார். இதனால், அதிர்ச்சியடைந்த வளர்மதி, பின்னர் சென்ட்ரல் ரயில்வே போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து, மர்ம நபரை தேடி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஓடும் ரயிலில் பெண்ணிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பேசின்பிரிட்ஜ் பகுதியில் ரயில் பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post பேசின்பிரிட்ஜ் பகுதியில் ஓடும் ரயிலில் பெண்ணிடம் 10 சவரன் செயின் பறிப்பு: மர்ம நபருக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Tags : Basinbridge ,Thandaiyarpet ,Dinakaran ,
× RELATED தண்டையார்பேட்டையில் வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை: 5 பேருக்கு வலை