×

காதலுக்கு தடையாக இருந்ததால் ஆத்திரம் காதலியின் அண்ணனுக்கு சரமாரியாக கத்திக்குத்து: ரவுடி உட்பட 4 பேர் கைது

வேளச்சேரி: மேடவாக்கம், புதுநகர், ராஜேந்திர பிரசாத் தெருவை சேர்ந்த மேரி சுவேதா (20) என்பவரும், பெரும்பாக்கம், இந்திரா நகர், எத்திராஜ் தெருவை சேர்ந்த ராஜேஷ் (26) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதுபற்றி அறிந்த மேரி சுவேதாவின் அண்ணன் மைக்கேல் விஜய் (23), தங்கையின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் ராஜேஷ் பற்றி விசாரித்தபோது, அவர் வழிப்பறி, திருட்டு உட்பட பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதும், பெரும்பாக்கம் காவல்நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரியவந்துள்ளது. இதுபற்றி தங்கையிடம் தெரிவித்துள்ளார்.

இதனால், அவர் ராஜேஷை காதலிக்க மறுத்துள்ளார். இதற்கு முக்கிய காரணமான மைக்கேல் விஜய் கடந்த 6ம் தேதி மேடவாக்கம் கூட்ரோடு அருகே நின்றிருந்தபோது, அங்கு தனது 2 நண்பர்களுடன் வந்த ராஜேஷ், மைக்கேல் விஜய்யை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பிச்சென்றார். இதில் படுகாயமடைந்த மைக்கேல் விஜய்யை அப்பகுதியினர் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேஷ் மற்றும் அவரது நண்பர்கள் திருமுடிவாக்கம், எருமையூரை சேர்ந்த பாரத் (24), விக்னேஷ் (21), பெரும்பாக்கம், நேசமணி நகரை சேர்ந்த ஆகாஷ் (23) ஆகிய 4 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

The post காதலுக்கு தடையாக இருந்ததால் ஆத்திரம் காதலியின் அண்ணனுக்கு சரமாரியாக கத்திக்குத்து: ரவுடி உட்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Rage ,Mary Swetha ,Rajendra Prasad Street ,Medavakkam ,Pudunagar ,Perumbakkam ,Indira Nagar ,Ethiraj ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...