×

ஆர்.கே.பேட்டை அருகே பரபரப்பு 2 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்: 5 பேர் கைது

பள்ளிப்பட்டு: அனுமதியின்றி நாட்டு துப்பாக்கிகள் வைத்திருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் ஆர்..கே.பேட்டை அருகே ராஜாநகரம கிராமத்தைச் சேர்ந்த சிலர் நாட்டு துப்பாக்கிகள் வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபாஸ் கல்யாண் உத்தரவின்பேரில் திருத்தணி துணை காவல் கண்காணிப்பாளர் விக்ணேஷ் ஆலோசனைப்படி ஆர்.கே.பேட்டை உதவி காவல் ஆய்வாளர் சிவா போலீசாருடன் ராஜாநகரம் கிராமத்தில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த எல்லப்பன் மகன் ஜெகன்நாதன்(36), தேவராஜ் மகன் ராம்குமார் (27), ஆகியோரிடம் இரண்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்து கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் கொடைக்கல் சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மகன் சீனிவாசன்(50), ராமலிங்கம் மகன் சேகர், முனுசமி மகன் ரவி(57) ஆகியோர் நாட்டு துப்பாக்கில் தயார் செய்து வழங்கியதாகவும், காட்டு பன்றிகள் வேட்டையாட பயன்படுத்தி வந்ததாக கூறினர். போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 5 பேரரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post ஆர்.கே.பேட்டை அருகே பரபரப்பு 2 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்: 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : RK Pettah ,Pallipattu ,Tiruvallur District Rajanagaram ,Dinakaran ,
× RELATED பள்ளிப்பட்டு அருகே காட்டுப்...