×

சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த தாய் சிறையிலடைப்பு

செங்கல்பட்டு: பூந்தமல்லி அடுத்த மாங்காடு பகுதியை சேர்ந்தவர் மணி என்கிற அருண்குமார் (27). இவரது தாயார் ஜெகதம்பாள் (55). கடந்த 2016ம் ஆண்டு, ஜெகதம்பாள் தங்கையின் 13 வயது மகளை மணி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால், அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார். இப்புகாரின்பேரில், மாங்காடு போலீசார் மணி மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த தாயார் ஜெகதாம்பாள் மீது வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், வழக்கினை நேற்று விசாரித்த நீதிபதி தமிழரசி தாய், மகன் ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து, போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். அரசு தரப்பில் வக்கீல் புவனேஸ்வரி ஆஜரானார்.

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த தாய் சிறையிலடைப்பு appeared first on Dinakaran.

Tags : Bocso ,Chengalpattu ,Mani ,Arunkumar ,Mangadu ,Poontamalli ,Jakathampal ,
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...