×

சிறுமிக்கு தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டு சிறை

நெல்லை, ஜூன் 24: வள்ளியூர் அருகே சிறுமிக்கு தொந்தரவு கொடுத்த வழக்கில் கைதான முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டது.
வள்ளியூர் அருகேயுள்ள ஆவுடையம்மாள்புரத்தை சேர்ந்த சுயம்புதுரை (59). இவர், கடந்த 2019ம் ஆண்டு இதே பகுதியை சேர்ந்த சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். இதுகுறித்து சிறுமியின் உறவினர் வள்ளியூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் சுயம்புதுரையை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கை நீதிபதி அன்புசெல்வி விசாரித்து சுயம்புதுரைக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த வள்ளியூர் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் பாராட்டினார்.

The post சிறுமிக்கு தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Nellai ,Valliyur ,
× RELATED நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநர்,...