×

பைக் திருடிய 2 பேர் கைது

தூத்துக்குடி, ஜூன்24: தூத்துக்குடியில் பைக் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். திசையன்விளையை சேர்ந்தவர் டோமினிக் வசந்த் (23). இவர் கடந்த 3.06.2023 அன்று தூத்துக்குடிக்கு வந்துள்ளார். அங்கு நேருபூங்கா அருகே தனது பைக்கை நிறுத்திவிட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்த போது, அவரது பைக்கை யாரோ மர்ம நபர் திருடி சென்று விட்டார். இதே போன்று தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த செல்வக்குமார் மகன் வெற்றிவேல் (24) என்பவர் கடந்த 18.06.2023 அன்று முத்துநகர் கடற்கரை பூங்கா பகுதியில் பைக்கை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வந்த போது, மர்ம நபர் பைக்கை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இது குறித்த புகார்களின் பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், திருச்செந்தூர் சரவண பொய்கை சாலையைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் ஹரிகரன் (19), ஆறுமுகநேரி மடத்துவிளையைச் சேர்ந்த ஓஸ்வால்ட் மகன் ஜோஸ்வின் டெரில் (19) ஆகிய இருவரும் சேர்ந்து பைக்குகளை திருடியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் ஹரிகரன், ஜோஸ்வின் டெரில் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ₹1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post பைக் திருடிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Dominic Vasanth ,Vektionvilai.… ,
× RELATED தூத்துக்குடி மருத்துவமனையில் ஏ.சி. வார்டு தொடக்கம்..!!