×

மரக்கன்று நடும் நிகழ்ச்சி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த பி.வி.களத்தூரில் மாநில நெடுஞ்சாலை துறையின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் காஞ்சிபுரம் எம்பி செல்வம், செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி ஆகியோர் முன்னிலையில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர் தா.மோ.அன்பரசன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாநில நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர் செல்வகுமார், உதவி கோட்ட பொறியாளர் ஆண்ட்ரூஸ், உதவி பொறியாளர்கள் சண்முகப்பிரியன், மாநில நெடுஞ்சாலை துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

The post மரக்கன்று நடும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Brinkalpadu ,Brinkalputtu ,Kanchipuram ,Collector ,Rakulnath ,State Highway Department ,Kaladur ,
× RELATED காஞ்சிபுரம் அருகே ஓரத்தூர் பகுதியில்...