×

வள்ளலார் குறித்து ஆளுநர் ரவியின் பேச்சு சாதியத்தை உயர்த்தி பிடிக்கும் சனாதனத்தின் உச்சம்: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் சாதிய சனாதன சமூக கட்டமைப்பை உடைக்கவும், அதன் கருத்தியலை தாக்கி அழிக்கவும் ஒலித்த முதன்மைக்குரல் வள்ளலாரின் குரலாகும். “சாதியும் மதமும், சமயமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட் பெரும் சோதி, என்றும் சாதியும், மதமும் சமயமும் வேண்டேன். சாத்திரக் குப்பையும் வேண்டேன்” எனவும் “மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்” எனவும் முழங்கிவர். அதேபோல, “அருட் பெருஞ் சோதி, தனிப்பெருங் கருணை” என தமிழ்நாட்டில் ஆன்மிகத்தில் சாதி, மத பேதமின்றி அனைவரையும் உள்ளடக்கிய புதிய தடம் பதித்தவர். “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என அனைத்துயிர்களின் சமத்துவம் பேசியவர். இத்தனை சிறப்பு கொண்ட வள்ளலாரை “பார்ப்பனிய, சாதியத்தை உயர்த்தி பிடிக்கும் சனாதனத்தின் உச்சம்” என தமிழ்நாட்டு ஆளுநர் கூறியதை என்னவென்று சொல்வது, இதுபோல, திட்டமிட்டு பொய்யுரைகளை பரப்பும் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

The post வள்ளலார் குறித்து ஆளுநர் ரவியின் பேச்சு சாதியத்தை உயர்த்தி பிடிக்கும் சனாதனத்தின் உச்சம்: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Governor ,Ravie ,Vallalar ,Communist ,Chennai ,Secretary of State ,Mutharasan ,Sanadhana ,Tamil Nadu ,Indian Communist ,
× RELATED ஆளுநர் மீது பாலியல் புகார் எதிரொலி;...