×

பாஜகவின் 9 ஆண்டு கால ஆட்சியால் பேரழிவு!: பாஜக தோற்கடிக்கப்பட்டே ஆக வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதி.. டி.ராஜா பேட்டி..!!

பாட்னா: பாஜகவின் கடந்த 9 ஆண்டு கால ஆட்சி பேரழிவை ஏற்படுத்தியுள்ளது என்று டி.ராஜா தெரிவித்துள்ளார். பீகார், பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றது. பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நிறைவடைந்தது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். ஆலோசனை கூட்டத்திற்கு பின் எதிர்க்கட்சிகள் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஆலோசித்தோம்.

பாஜகவின் கடந்த 9 ஆண்டு கால ஆட்சி பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் ஜனநாயகத்துக்கும் சமூகத்துக்கும் பாஜக ஆட்சியில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. மோடி தலைமையிலான அரசு சிறிதும் வெட்கமின்றி பெரும் தொழிலதிபர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. பெரும் தொழிலதிபர்களுக்காக மட்டுமே மோடி அரசு திட்டங்களை செயல்படுத்துகிறது. இதே நிலை நீடித்தால் நாட்டில் ஜனநாயகம் என்பதே இல்லாமல் போய்விடும். பாஜக தோற்கடிக்கப்பட்டே ஆக வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக உள்ளன என்று கூறினார்.

The post பாஜகவின் 9 ஆண்டு கால ஆட்சியால் பேரழிவு!: பாஜக தோற்கடிக்கப்பட்டே ஆக வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதி.. டி.ராஜா பேட்டி..!! appeared first on Dinakaran.

Tags : Bajaka ,BJP ,TD king ,Patna ,Pajaka ,D.C. ,Patna, Bihar ,TD Raja ,
× RELATED பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் மீதான பாலியல்...