×

மேல கோதையாறு பகுதியில் உடல் மெலிந்த நிலையில் அரிசி கொம்பன் யானை: வனத்துறை தகவல்

நெல்லை: மேல கோதையாறு பகுதியில் முகாமிட்டுள்ள அரிசி கொம்பன் யானை உடல் மெலிந்த நிலையில் காணப்படுகிறது. கேரளாவில் இருந்து தமிழகத்தின் கம்பம் பகுதிக்குள் நுழைந்த அரிசிக்கொம்பன் யானை அந்நகரத்திற்குள் புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

மேலும் யானையை பிடிக்க வனத்துறை நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், இறுதியாக வனத்துறையினர் யானையை பிடித்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் விடப்பட்டது.அங்கு போதுமான உணவு, தண்ணீர் இல்லை என்பதனால் மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவில் விட கோரி கேரளாவை சேர்ந்த ரெபேக்கா ஜோசப் என்பவர் ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் வரத சக்ரவர்த்தி அமர்வுக்கு மாற்றப்பட்டு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது களக்காடு முண்டன்துறையில் யானை நலமாக உள்ளதாகவும், அதன் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் வனத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில் யானையை எங்கு விட வேண்டும் என முடிவு செய்யவேண்டியது வனத்துறையினரே நிபுணர்த்துவம் பெற்றவர்கள் எனக் கூறி வழக்கை ஐகோர்ட் முடித்து வைத்தனர். இந்நிலையில் வனத்துறை கண்காணிப்பில் உள்ள அரிசிக்கொம்பன் வழக்கமாக விரும்பி சாப்பிடும் அரிசி, கரும்பு போன்றவை கிடைக்காததால் உடல் மெலிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

The post மேல கோதையாறு பகுதியில் உடல் மெலிந்த நிலையில் அரிசி கொம்பன் யானை: வனத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Mela Gothayarai Region ,Mela Gothayar ,Kerala ,Tamil Nadu ,Gothai Area ,Dinakaran ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...