×

சூளகிரி வட்டாரத்தில் மக்களை அச்சுறுத்தும் தெருநாய் கூட்டம்

சூளகிரி : சூளகிரி ஊராட்சி அத்திமுகம், உத்தனப்பள்ளி, பேரிகை, காமன்தொட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. பஸ் நிலையம், இறைச்சி கடைகள், மால்கள் மற்றும் பள்ளிகள் எதிரே கூட்டமாக சுற்றித்திரியும் இந்த நாய்கள், வாகனங்களில் செல்வோர் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளை துரத்தி, துரத்தி கடிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், மாணவிகள் ஒருவித அச்சத்துடனே செல்லும் நிலை உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன், ஓசூரில் தெருநாய்கள் ஒரு சிறுமியை கடித்து குதறியதில், சிறுமி படுகாயம் அடைந்தாள். எனவே, சூளகிரி ஒன்றியத்தில் சுற்றித்திரியும் தெருநாய்களை ஊராட்சி நிர்வாகம் பிடித்து, அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சூளகிரி வட்டாரத்தில் மக்களை அச்சுறுத்தும் தெருநாய் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Chulagiri ,Choolagiri ,Panchayat Athimugam ,Uthanapalli ,Barikai ,Kamanthotti ,Dinakaran ,
× RELATED கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி