×

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் பரிதாப பலி

வேப்பூர், ஜூன் 23: வேப்பூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் மெய்யப்பன் மனைவி ஜோதி(48). இவர் நேற்று மாலை தனது கூரை வீட்டில் குடும்பத்தினருடன் இருந்துள்ளார். அப்போது மாலை சுமார் 5.30 மணியளவில் பெய்த பலத்த மழையால், வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து ஜோதி மீது விழுந்துள்ளது. இதில் அவர் மயங்கி விழுந்தார். அவரது கணவர் மற்றும் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Veypur ,Meiyappan ,Jyoti ,Veypur South Street ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி