×

சோழவந்தானில் மதிமுகவினர் கையெழுத்து இயக்கம்

 

சோழவந்தான், ஜூன் 23: சோழவந்தானில் மதிமுக சார்பில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. வாடிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் துரைப்பாண்டி தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர்கள் அறிவழகன், ரமா, பொதுக்குழு நந்தகுமார், செயற்குழு சுந்தர் முன்னிலை வகித்தனர். பேரூர் செயலாளர் கருணா வரவேற்றார். புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மார்நாடு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.

கவர்னரை நீக்க வலியுறுத்தும் படிவத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கையெழுத்திட்டனர். திமுக பேரூராட்சி தலைவர் ஜெயராமன், பேரூர் செயலாளர் சத்தியபிரகாஷ், அவை தலைவர் தீர்த்தம், துணை செயலாளர் ஸ்டாலின், மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, கவுன்சிலர் குருசாமி, இ.கம்யூனிஸ்ட் நிர்வாகி ஜோதி ராமலிங்கம் உள்ளிட்டோர் கையெழுத்து இயக்கத்தை பாராட்டி வாழ்த்தி பேசினர். இதில் மதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post சோழவந்தானில் மதிமுகவினர் கையெழுத்து இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Madhimuk ,Cholavantan ,Cholavanthan ,Tamil Nadu ,Governor ,RN Ravi ,
× RELATED சோழவந்தானில் உலக நன்மை வேண்டி யாக பூஜை