காரைக்குடி, ஜூன் 23: காரைக்குடி பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகளில் சர்வதேச யோகா தினம் கொண்டாப்பட்டது. காரைக்குடி செல்லப்பன் வித்யாமந்திர் இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளி மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையும் இணைந்து சர்வதேச யோகா தினம் கொண்டாப்பட்டது. பள்ளியின் கல்வி இயக்குநர் டாக்டர் ராஜேஸ்வரி வரவேற்றார். பள்ளி நிர்வாக இயக்குநர் சங்கீதா சத்யன் முன்னிலை வகித்தார். பள்ளி தாளாளர் சத்யன் தலைமை வகித்து பேசுகையில்,
உடல், மனம் மற்றும் ஆன்மீக நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டு இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. யோகா பயிற்சி மற்றும் அதன் எண்ணற்ற நன்மைகள் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள எங்கள் பள்ளியில் ஆண்டுதோறும் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது என்றார். மத்திய தொழில் பாதுகாப்பு படை தலைமை அதிகாரி சங்கர்குமார் ஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்கள் 300 பேர் இணைந்து யோகா முத்திரை வடிவில் அமர்நது யோகா செய்தனர். பள்ளி முதல்வர் தேவராஜலு நன்றி கூறினார்.
The post காரைக்குடி பள்ளியில் சர்வதேச யோகா தினம் appeared first on Dinakaran.