×

2 நாள் பெய்த கனமழையால் தமிழ்நாட்டில் ஏரிகளின் நீர்மட்டம் 70% வரை உயர்வு: நீர்வளத்துறை அதிகாரி தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் ஏரிகளின் நீர்மட்டம் 40 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை உயர்ந்துள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மழை வெளுத்து வாங்கியது. மீனம்பாக்கத்தில் 160 மி.மீ. மழை பதிவானது. இதற்கு முன்பு 1996ம் ஆண்டு ஜூன் மாதத்தில் 280 மி.மீ. மழை பதிவானது. சென்னையில் ஜூன் மாதம் பெய்ய வேண்டிய இயல்பான மழை அளவு 4 செ.மீ; ஆனால், 16 செ.மீ மழை பெய்துள்ளது. இது சுமார் 295 சதவிகிதம் அதிகம். ஜூன் மாதத்தில் தமிழகத்தில் மழைப்பொழிவு சராசரியாக 3.5% பெய்யும். ஆனால், 3.7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த கனமழையால் சென்னையின் குடிநீர் ஆதாரங்களான செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், செங்குன்றம், தேர்வாய்கண்டிகை உள்ளிட்ட ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்: 2 நாட்கள் பெய்த மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் 40 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அதன்படி பூண்டி நீர்த்தேக்கத்தில் 42 சதவீதம் மழை பெய்துள்ளது. இதனால், அதன் நீர்மட்டமானது 1,347 மில்லியன் கனஅடியாக உயர்ந்துள்ளது. செங்குன்றம் ஏரி பகுதியில் 68 சதவீதம் மழை பெய்ததால் அதன் நீர்மட்டம் தற்போது 2244 மில்லியன் கனஅடியாக உயர்ந்துள்ளது. சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கத்தின் முழுகொள்ளவான 3645 மில்லியன் கனஅடியில் 70 சதவீதம் கூடுதல் நீர்வரத்தால் 2571 மில்லியன் கனஅடியாக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தேர்வாய்கண்டிகையில் நீர் மட்டம் 419 மில்லியன் கனஅடியாக அதிகரித்துள்ளது. மேலும் தென்மேற்கு பருவமழை மற்றும் கிருஷ்ணா நீர்வரத்தும் நீர்மட்டம் உயர்வுக்கு காரணமாக உள்ளது. மேலும் ஆகஸ்ட் மாதம்நெம்மேலி கடல்நீர் குடிநீராக்கும் ஆலையில் 150 எம்எல்டி நீர் கிடைக்கப்பெறும். அதே நேரத்தில் 400 எம்எல்டி குடிநீராக்கும் ஆலை வரவுள்ளது. இதன்மூலம் நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். மேலும் நீர் தேக்கங்களின் கொள்ளளவை அதிகரி்க்க தூர்வாரும் பணியை மேற்கொள்ள உள்ளது. பருவமழையை மட்டும் நம்பியிருப்பதைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

The post 2 நாள் பெய்த கனமழையால் தமிழ்நாட்டில் ஏரிகளின் நீர்மட்டம் 70% வரை உயர்வு: நீர்வளத்துறை அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Water Resources Officer ,Chennai ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...