×

தமிழ்நாடு முழுவதும் பசுமை மயானங்கள்: கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம்

சென்னை: ‘தமிழகத்தில் உள்ள மயானங்களை பசுமை மயானங்களாக மாற்ற வேண்டும்’ என கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு எழுதியுள்ள கடிதத்தில் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து தலைமை செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்: புதைக்குழிகள் மற்றும் சுடுகாடுகளை தூய்மையாகவும், நேர்த்தியாகவும் பராமரித்து அமைத்திட வேண்டும். மயானங்களை முறையாக பராமரிப்பதின் மூலம் ஏற்கனவே உறவுகளை இழந்த மக்களை சிரமத்துக்கு உள்ளாக்குவதிலிருந்து தடுக்கப்படும். ஆனால் பல இடங்களில் உள்ள மயானங்கள் முறையாக பராமரிக்கப்படாமல், அடிப்படை வசதிகள் இன்றி செயல்படுகிறது. எனவே, மயானங்கள் அனைத்தும் பசுமை மயானங்களாக மாற்றும் படி சற்றுச்சுவர் அமைத்து, பூச்செடிகள் மற்றும் மரங்களை நடவேண்டும். மேலும் தண்ணீர் வசதி, கொட்டகை அமைத்து மற்றும் பசுமை புதைகுழிகளை ஏற்படுத்த வேண்டும். இந்த வசதிகளை மேம்படுத்த தங்கள் பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்களை பயன்படுத்தி கொள்ளலாம். இதன் மூலம் மயானங்களின் தரத்தை மேம்படுத்த உதவும். மேலும் தங்கள் மாவட்டங்களில் இதுபோன்ற பசுமை மயானங்களை அமைத்தால் பிற பகுதிகளுக்கு எடுத்துக்காட்டாகவும் அமையும்.

The post தமிழ்நாடு முழுவதும் பசுமை மயானங்கள்: கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Secretary ,CHENNAI ,Thaoyanpu ,Tamilnadu ,Dinakaran ,
× RELATED கோடைக்காலத்தையொட்டி தமிழ்நாட்டில்...