×

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அர்ச்சகர் பயிற்சி

சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஓராண்டு சான்றிதழுடன் அர்ச்சகர் பயிற்சியில் மாணவருக்கு இலவசமாக உணவு, தங்குமிடம் மற்றும் மாதம் ரூபாய் மூன்றாயிரம் மட்டும் உதவித் தொகை வழங்கப்படும். பயிற்சியில் சேரும் மாணவர்கள் இந்து சமயத்தை சார்ந்தவராகவும் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருத்தல் வேண்டும். வயது வரம்பு 14 முதல் 24 வயதுக்குள் இருத்தல் வேண்டும். விண்ணப்பங்களை parthasarathy.hrce.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

The post திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அர்ச்சகர் பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Tiruvallikeni Parthasarathy Temple ,Chennai ,Thiruvallikeni Parthasarathy Swamy temple ,
× RELATED திருவல்லிக்கேணி பார்த்தசாரதி...