×

இலவசங்களை வழங்காவிட்டால் பாஜ போராட்டத்தில் குதிக்கும்: எடியூரப்பா எச்சரிக்கை

தாவணகெரே: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியபடி இலவசங்களை மக்களுக்கு வழங்காவிட்டால் பாஜ போராட்டத்தில் குதிக்கும் என்று முன்னாள் முதல்வர் எடியூரப்பா எச்சரிக்கைவிடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ‘காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி மக்களுக்கு இலவசங்களை சட்டமன்ற கூட்டத்தொடருக்கு முன் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் சட்டமன்றத்துக்கு வெளியே, உள்ளே பாஜ போராட்டத்தில் குதிக்கும். காங்கிரஸ் அறிவித்துள்ள 10 கிலோ இலவச அரிசி திட்டத்துக்கு ஒன்றிய அரசு அரிசி வினியோகம் செய்யவில்லை என்று முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டுகிறார். சித்தராமையாவின் குற்றச்சாட்டு மக்களை ஏமாற்றும் முயற்சி. இது மன்னிக்கமுடியாத குற்றம். இன்னும் 4 இலவச திட்டங்கள் பாக்கியுள்ளன. சட்டமன்ற கூட்டத்தொடருக்கு முன்பு காங்கிரஸ் அத்திட்டங்களை அமல்படுத்த வேண்டும்’ என்றார்

The post இலவசங்களை வழங்காவிட்டால் பாஜ போராட்டத்தில் குதிக்கும்: எடியூரப்பா எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : BJP ,Yeddyurappa ,Thavanagere ,Former ,Chief Minister ,Congress ,
× RELATED கர்நாடகாவில் எடியூரப்பாவின் மகனை எதிர்த்து ஈஸ்வரப்பா வேட்புமனு தாக்கல்