×

ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மதிமுக கையெழுத்து இயக்கம்: மல்லை சத்யா தொடங்கி வைத்தார்

கூடுவாஞ்சேரி: தமிழ்நாடு அரசுக்கு முட்டுக்கட்டை போடும் ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, மதிமுக சார்பில் கூடுவாஞ்சேரியில் கையெழுத்து இயக்கத்தை மல்லை சத்யா தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசுக்கு முட்டுக்கட்டை போடும் ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, மதிமுக சார்பில் கூடுவாஞ்சேரியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதனை மல்லை சத்யா நேற்று தொடங்கி வைத்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுக்கும், சட்டமன்ற செயல்பாடுகளுக்கும் முட்டுக்கட்டை போடும் ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக பதவி நீக்கம் செய்யகோரி குடியரசு தலைவரை வலியுறுத்தி மதிமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் நேற்று நடந்தது.

இதில், மாவட்ட செயலாளர் ஊனை பார்த்திபன் தலைமை தாங்கினார். அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் ராமலிங்கம், தொழிலாளர் முன்னணியின் மாநில செயலாளர் வெங்கடேசன், மாவட்ட அவை தலைவர் வல்லம் கோபி ஆகியோர் முன்னில வகித்தனர். காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் பாரத் ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணை பொது செயலாளர் மல்லை சி.இ.சத்யா கலந்துகொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

இதில், திமுக சார்பில் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகர மன்ற துணை தலைவர் லோகநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில தொண்டரணி செயலாளர் கராத்தே பாண்டியன், மதிமுக நிர்வாகிகள் ஏழுமலை, சுரேஷ்பாபு, வடிவேலு, பார்த்திபன், அஜ்மீர், அசோக், ராஜசேகர், வழக்கறிஞர் சார்லஸ், சுமித்ரா, பச்சையப்பன், புருஷோத்தமன், பார்த்தசாரதி, செங்குட்டுவன், சுப்பிரமணி, ராமமூர்த்தி, ரவிராஜ் உட்பட ஏராளமான கலந்துகொண்டனர். திருப்போரூர்: திருப்போரூரில், தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பில் இருந்து, ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி, மதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில், மதிமுக மாநில துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா பங்கேற்று கையெழுத்து இயக்கத்தை நேற்று தொடங்கி வைத்தார்.

இதில், திருப்போரூர் வடக்கு ஒன்றிய மதிமுக செயலாளர் லோகநாதன் தலைமை தாங்கினார். நகர அவைத்தலைவர் சி.கே.சம்சுதீன் வரவேற்றார். மதிமுக மாநில துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா கலந்துகொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மதிமுக மாவட்ட செயலாளர் பார்த்தீபன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் இராஜ்குமார், மா.கம்யூ ஒன்றிய செயலாளர் செல்வம், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் ஜெகதீசன், காங்கிரஸ் நகர தலைவர் தியாகராஜன், மதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் தனபால், திமுக நகர நிர்வாகிகள் அஸ்கர் அலி, மு.க.ரவி, சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மதிமுக கையெழுத்து இயக்கம்: மல்லை சத்யா தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Governor R. N.N. Malla Satya ,Ravi ,Gooduwancheri ,Governor R.R. N.N. ,Goduwancheri ,Madimuga ,Governor ,R. N.N. Madimuga ,Malli Satya ,
× RELATED பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து