×

குடும்பத்துடன் நிகழ்ச்சிக்கு சென்றபோது விபரீதம் வீட்டை உடைத்து 28 சவரன் நகை கொள்ளை: மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலை

கூடுவாஞ்சேரி: வண்டலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 28 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை, போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வண்டலூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெங்கடேசபுரம், 4வது தெருவை சேர்ந்தவர் கோகுலராமன் (32). இவர், சென்னை இசிஆரிலுள்ள எம்ஜிஎம் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி, ஒரு பெண் குழந்தை ஆகியோர் உள்ளனர். இந்நிலையில், கோகுலராமனின் தனது நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தனது குடும்பத்துடன் கடந்த 18ம் தேதி சென்றார். பின்னர், 20ம் தேதி இரவு வீடு திரும்பிய குடும்பத்தினர், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே, உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 28 சவரன் தங்க நகைகள் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இது குறித்து ஓட்டேரி போலீசாரிடம் புகார் செய்தார். அதன் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து காஞ்சிபுரத்தில் இருந்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

The post குடும்பத்துடன் நிகழ்ச்சிக்கு சென்றபோது விபரீதம் வீட்டை உடைத்து 28 சவரன் நகை கொள்ளை: மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலை appeared first on Dinakaran.

Tags : Vibritam ,Asamis ,Kooduwancheri ,Vandalur ,Viritham ,
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகைக்காக...