×

மோசமான வானிலை, கனமழை காரணமாக நெதர்லாந்தில் விமான போக்குவரத்து பாதிப்பு

ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்தின் பல பகுதிகளில் சில நாட்களாக இடி-மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகள் வெள்ளக்காடானது. அவசியமின்றி வீட்டை விட்டு வெளியேற பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வானிலை மையத்தின் எச்சரிக்கை காரணமாக ஆம்ஸ்டர்டாம் சர்வதேச விமான நிலையத்தில் விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டி இருந்த 37க்கும் மேற்பட்ட சர்வதேச விமானங்களின் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன.

மேலும் ஆம்ஸ்டர்டாம் வரக்கூடிய சர்வதேச விமானங்களின் சேவையை ரத்து செய்து அண்டை நாடுகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. நிலைமை சீராகும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என அந்நாட்டின் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் விமான பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

The post மோசமான வானிலை, கனமழை காரணமாக நெதர்லாந்தில் விமான போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Netherlands ,Amsterdam ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...