×

மியான்மர் நாட்டில் அடுத்தடுத்து 3 முறை உணரப்பட்ட நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

மியான்மர்: மியான்மர் நாட்டில் அடுத்தடுத்து 3 முறை உணரப்பட்ட நிலநடுக்கங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மியான்மர் நாட்டில் கடந்த 24 மணிநேரத்திற்குள் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளது. இதன்படி, இன்று காலை 5.43 மணியளவில் யாங்கன் நகரில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.5 ஆக பதிவானது.

இந்நிலநடுக்கம் 48 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இது கடந்த 24 மணிநேரத்திற்குள் ஏற்பட்ட 3-வது நிலநடுக்கம் என்று கூறப்படுகிறது. அதற்கு 3 மணிநேரத்திற்கு முன்னர், 2-வது நிலநடுக்கம் ஏற்பட்டது. அது அதிகாலை 2.53 மணியளவில் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவான அந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு முன்பு முதல் நிலநடுக்கம் நேற்றிரவு 11.56 மணியளவில் ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி இருந்தது. அந்நிலநடுக்கம் 25 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இருந்தது. எனினும், இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மியான்மர் நாட்டில் அடுத்தடுத்து 3 முறை உணரப்பட்ட நிலநடுக்கம்: மக்கள் அச்சம்! appeared first on Dinakaran.

Tags : 3 ,Myanmar ,
× RELATED கஞ்சா போதையில் பெட்ரோல் பங்க் ஊழியரிடம் தாக்கி பணம் பறித்த 3 பேர் கைது