×

பூம்புகார் சட்டமன்ற அலுவலகத்தில் உதவி எண் மையத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்

செம்பனார்கோயில், ஜூன் 22: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கலைஞரின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வருகை தந்தார். இதனை முன்னிட்டு நேற்று காலை செம்பனார்கோயிலில் மயிலாடுதுறை மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் தலைமையில் கட்சியினர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அதைத் தொடர்ந்து செம்பனார்கோயிலில் உள்ள பூம்புகார் சட்டமன்ற அலுவலகத்தில் தொகுதி மக்களின் குறைகளை தெரிவிக்கும் வகையில் உதவி எண் மற்றும் இ-சேவை மையத்தை துவக்கி வைத்தார். பின்னர் மறைந்த கழகத்தின் மூத்த முன்னோடி மிசா பி.மதிவாணனுக்கு, செம்பனார்கோவிலில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செம்பனார்கோயில் கடைவீதியில் உள்ள அண்ணாசிலை அருகில் திமுக கொடியை ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட செயலாளர் பூம்புகார் எம்எல்ஏ நிவேதாமுருகன், மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம், பன்னீர்செல்வம் எம்எல்ஏ, தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பிஎம்.தர், மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், அமுர்த விஜயகுமார், அப்துல்மாலிக், ஒன்றியக்குழு தலைவர் நந்தினி தர், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் அர்சத் மற்றும் ஒன்றியக்குழு தலைவர்கள், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

The post பூம்புகார் சட்டமன்ற அலுவலகத்தில் உதவி எண் மையத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,Helpline Center ,Poompugarh Assembly Office ,Sembanarkoil ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin ,Tamilnadu ,Udhayanidhi Stalin ,Bhoompukar Assembly Office ,Dinakaran ,
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...