×

திருத்துறைப்பூண்டி உழவர் சந்தையில் ஊட்டி டீத்தூள் விற்பனை அறிமுகம்

 

திருத்துறைப்பூண்டி, ஜூன் 22: திருத்துறைப்பூண்டி உழவர் சந்தையில் நீலகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து தேயிலை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் குறைந்த விலைக்கு டீத்தூளை அறிமுக விற்பனை செய்தனர். முதலில் விற்ற டீ தூள் பாக்கெட்டை மலர் வணிகர் சங்க தலைவர் காளிதாஸ், மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் வக்கீல் நாகராஜன் இடமிருந்து பெற்றுக் கொண்டார். இதில் அரசு வழக்கறிஞர் பாஸ்கர், உழவர் சந்தை சந்தை வேலாண்மை அலுவலர் ரமேஷ், உதவி வேளாண்மை அலுவலர் வடிவுக்கரசி, காவலர்கள் கல்யாணம், தமிழ் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து உழவர்சந்தையில் டீ தூள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post திருத்துறைப்பூண்டி உழவர் சந்தையில் ஊட்டி டீத்தூள் விற்பனை அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Thiruthurapoondi ,Tiruthurapoondi ,Tiruthurapoondi Farmers Market ,Nilgiris ,Tea Growers Association ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...