×

மசாஜ் சென்டரில் விபசாரம்: புரோக்கர் கைது

 

கோவை, ஜூன் 22: கோவையை சேர்ந்த 28 வயதான வாலிபர் ஒருவர், பீளமேடு சிட்ரா பஸ் நிறுத்தம் அருகே உள்ள மசாஜ் சென்டருக்கு சென்றார். அப்போது அங்கிருந்த ஒரு நபர் நீங்கள் அதிகமாக பணம் கொடுத்தால், இளம்பெண்ணுடன் ஜாலியாக இருக்கலாம் என விபசாரத்துக்கு அழைப்பு விடுத்தார். அந்த வாலிபர், பீளமேடு போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் அந்த மசாஜ் சென்டருக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, அங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், விபசார புரோக்கரான கோவை வீரகேரளத்தை சேர்ந்த மாரிமுத்து (37) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 24 வயது இளம்பெண்ணை மீட்டு ஒண்டிப்புதூரில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.

The post மசாஜ் சென்டரில் விபசாரம்: புரோக்கர் கைது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Peelamedu Citra ,Dinakaran ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்