×

பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு

 

திருமங்கலம், ஜூன் 22: திருமங்கலம் அருகே தூங்கிய பெண்ணிடம் 5 பவுன் தாலி செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். திருமங்கலம் அருகேயுள்ள கண்டுகுளத்தினை சேர்ந்தவர் துரைபாண்டி(55). முன்னாள் ராணுவவீரர். இவரது மனைவி நல்லம்மாள்(50). நேற்று முன்தினம் இரவு நல்லம்மாள் வீட்டில் குடும்பத்தினருடன் படுத்து தூங்கியுள்ளார்.

நள்ளிரவு கருப்பு டவுசர் பனியன் மட்டும் அணிந்த மர்மநபர் நல்லம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி செயினை பறித்துள்ளார். இதனால் விழித்த நல்லம்மாள் சப்தம் போடவே அந்த நபர் தாலிசெயினை பறித்து கொண்டு அருகில் இருந்த செல்போனையும் எடுத்து கொண்டு இருளில் தப்பியோடிவிட்டார். இதுகுறித்து நல்லம்மாள் கொடுத்த புகாரில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வருகின்றனர்.

The post பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Thirumangalam ,
× RELATED திருமங்கலம் பகுதியில்...