×

பத்தில் காயம் அடைந்தவர் சாவு

 

திருமங்கலம், ஜூன் 22: திருமங்கலம் அருகே நடந்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். திருமங்கலம் அருகேயுள்ள சமத்துவபுரத்தினை சேர்ந்தவர் சந்துரு(55). கட்டிட தொழிலாளி. மனைவி அழகம்மாள். நேற்று முன்தினம் இரவு இவர் ஓட்டலில் உணவு வாங்கி கொண்டு திருமங்கலம் – விருதுநகர் நான்கு வழிச்சாலையை சமத்துவபுரம் அருகே கடந்தார். அப்போது காரியாபட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி ஓட்டிவந்த டூவீலர் இவர் மீது மோதியது.

இதில் சந்துரு தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டூவீலர் ஓட்டிவந்த முத்துப்பாண்டி, வண்டியில் பின்னால் அமர்ந்து வந்த திருமங்கலம் கோபாலபுரத்தினை சேர்ந்த வெங்கடசாமி ஆகியோர் படுகாயமடைந்து மதுரை அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை முத்துப்பாண்டியும் உயிரிழந்தார். சம்பவம் குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பத்தில் காயம் அடைந்தவர் சாவு appeared first on Dinakaran.

Tags : Thirumangalam ,Samathuvapuram ,Tirumangalam ,
× RELATED திருமங்கலத்தில் பெண்ணை தாக்கி நகை...