×

புலி தாக்கி பசு பலி

மூணாறு, ஜூன் 22: கேரளா மாநிலம், மூணாறு அருகே கண்ணன் தேவன் நிறுவனத்திற்கு சொந்தமான செண்டுவாரை எஸ்டேட்டில் வசிப்பவர் ஜெயலட்சுமி. இவருக்கு சொந்தமான 2 கறவை பசுமாடுகள் இருதினங்களுக்கு முன் மேய்ச்சலுக்குச் சென்றுள்ளது. இருமாடுகளில் ஒரு பசு மாடு மீண்டும் வீடு திரும்பவில்ைல. இதனால், குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் தேடினர். இந்நிலையில் நேற்று காலை தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் பீல்டு எண் 20ல் இறந்த நிலையில் பசுவின் உடலை கண்டனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் புலி தாக்கி பசு இறந்ததை உறுதி செய்தனர்.

The post புலி தாக்கி பசு பலி appeared first on Dinakaran.

Tags : Munnar ,Jayalakshmi ,Sentuvarai ,Kannan Devan Company ,Munnar, Kerala ,
× RELATED மாட்டுப்பட்டி அணையில் பேட்டரி படகு சவாரி: சுற்றுலாப்பயணிகள் ஆர்வம்