×

பள்ளிக்கு செல்ல மகன் மறுப்பு ஆசிரியை தற்கொலை

செங்கோட்டை: செங்கோட்டை ஏ.கே.நகரில் வசித்தவர் கிருஷ்ணவேணி (51). கணவரை பிரிந்து மகனுடன் வசித்து வந்தார். செங்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வேதியியல் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவரது 15 வயது மகன் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். சரிவர படிப்பதில்லை. நேற்று காலை பள்ளிக்கு செல்ல மாட்டேன், படிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார். உடனே ஆசிரியை, மகனிடம் பள்ளிக்கு செல்லவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறிவிட்டு, அவனை வீட்டை விட்டு வெளியே அனுப்பி வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த போலீசார் ஆசிரியையின் உடலை கைப்பற்றி செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பள்ளிக்கு செல்ல மகன் மறுப்பு ஆசிரியை தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Sengottai ,Krishnaveni ,Sengottai AK Nagar ,Sengotta Govt Girls High School ,Dinakaran ,
× RELATED செங்கோட்டை அருகே மேக்கரை பகுதியில்...