×

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் கிண்ணம் கண்டெடுப்பு

ஏழாயிரம்பண்ணை: வெம்பக்கோட்டை அருகே, விஜயகரிசல்குளத்தில் நடக்கும் 2ம் கட்ட அகழாய்வில் சுடுமண் கிண்ணம் கண்டெடுக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில், இரண்டாம் கட்ட அகழாய்வில் சுடுமண் சுடுமண் கிண்ணம் கண்டெடுக்கப்பட்டது. இந்த அகழாய்வில் இதுவரை 13 அடி ஆழம் வரை ஆறு குழிகள் தோண்டப்பட்டுள்ளன.

தற்போது வரை இதில் சுடுமண்ணால் ஆன பொம்மை, புகைப்பிடிப்பான் கருவி, காதணி, சில்லு வட்டம் உள்ளிட்ட 2,150 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சமீபத்தில் தோண்டப்பட்ட குழியில் உணவு சாப்பிட பயன்படும் சுடு மண்ணால் ஆன கிண்ணம் கண்டெடுக்கப்பட்டது. இதன் மூலம் இப்பகுதியில் தொழில்கள் நடந்ததற்கான அடையாளம் அதிகளவில் கிடைத்து வருகிறது என்று தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

The post வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் கிண்ணம் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Vembakotta ,Ejayarampannai ,Vijayakarisalkulam ,Vembakkottai ,Virudhunagar district ,Vembakottai ,
× RELATED ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை...