×

அரை நிர்வாண கோலத்தில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்; போதைக்கு அடிமையாகி நண்பர்களுடன் உல்லாசமாக இருந்து வந்தார்: காதலன் பகீர் வாக்குமூலம்

கூடுவாஞ்சேரி: வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆனந்தன். ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி. இவருக்கு மனைவி கீதா (46), தேஜஸ்வினி (21) என்ற ஒரே மகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி, மகளை பிரிந்து, வெளிநாட்டில் ஆனந்தன் வசிப்பதாக கூறப்படுகிறது. இவரது மகள் தேஜஸ்வினி கேரளாவில் பேஷன் டெக்னாலஜி முடித்துவிட்டு, புதுவை மாநிலத்தை சேர்ந்த தனது காதலர் அஸ்வின் என்பவருடன் ஊரப்பாக்கம், ஜெகதீஷ் நகரில் ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இதில் அஸ்வின், பெருங்களத்தூரில் ஒரு தனியார் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.

எனினும், தனது தாயிடம் கேரளாவில் பேஷன் டெக்னாலஜி படித்து வருவதாக தேஜஸ்வினி கூறிவந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்த 18ம் தேதி மதியம் குடியிருப்பில் தனியே இருந்த தேஜஸ்வினி அரைநிர்வாண கோலத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்ததும் கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு தேஜஸ்வினியின் சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தேஜஸ்வினியின் காதலன் அஸ்வினை பிடித்து விசாரித்தனர்.

அஸ்வின் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது: புதுவை மாநிலத்தில் ஒரு பிரபல பாரில் குடிபோதையில் நடனமாடிய தேஜஸ்வினிக்கும் எனக்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது. இதைத் தொடர்ந்து, நானும் தேஜஸ்வினியும் ஊரப்பாக்கத்தில் ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாடகை எடுத்து வசித்தோம். மேலும், இருவரும் பெருங்களத்தூரில் ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளோம். இதற்கிடையே நான் பாண்டிச்சேரிக்கு செல்லும்போதெல்லாம், தனது நண்பர்களை வீட்டுக்கு வரவழைத்து தேஜஸ்வினி கஞ்சா, சிகரெட் உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்களுக்கு அடிமையாகி உல்லாசமாக இருந்து வந்ததாகத் தெரியவந்தது.

இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து தேஜஸ்வினியின் காதலை முறித்துக்கொண்டு, கடந்த சில நாட்களுக்கு முன் நான் புதுவையில் உள்ள பெற்றோரின் வீட்டுக்கு சென்றுவிட்டேன். இவ்வாறு காதலன் அஸ்வின் கூறியதாக தெரியவந்தது. மேலும், தேஜஸ்வினி தற்கொலை செய்த தினத்தன்று போலீசாரின் சோதனையில், அந்த அறைக்குள் மதுபான பாட்டில்கள், சிகரெட், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை கைப்பற்றியுள்ளனர். இதனால் தனது காதலனுக்கு தெரியாமல் போதை பழக்கத்தினால் நண்பர்களுடன் உல்லாசமாக இருந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பகீர் தகவல் தெரியவந்தது என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

The post அரை நிர்வாண கோலத்தில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்; போதைக்கு அடிமையாகி நண்பர்களுடன் உல்லாசமாக இருந்து வந்தார்: காதலன் பகீர் வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : Bakir ,Kootuvancheri ,Anandan ,Vellore District ,Keita ,Tejasvini ,
× RELATED கோவை மை வி3 ஆட்ஸ் நிறுவன அதிபர்கள் உள்ளிட்ட 3 பேர் மீது புதிய வழக்கு